Saturday, January 4, 2020

Poem for Jesus - 4


நின்னைச் சரணடைந்தேன்!!!

நின்னைச்  சரணடைந்தேன்இயேசுவே
                                   நின் பாதம் தேடி வந்தேன்
காயங்கள் பல தந்த,
        பாவங்கள் தான் நீங்க - நின்னைச்  சரணடைந்தேன்
பல பேய்கள் எமைச் சூழும்,
        கடும் சாபங்கள் தான் தீர - நின்னைச்  சரணடைந்தேன்
சுயநலம் தவிர்த்துத் தள்ளி,
      பிறர் நலம் தான் பேண - நின்னைச் சரணடைந்தேன்
சிறை எடுத்தனம் துன்பங்கள் எமை,
     அடியோடு அகன்றோட - நின்னைச் சரணடைந்தேன்
கடும் நோய்கள் பல நீங்கி,
               சுக வாழ்வுதனை கண்டிட - நின்னைச் சரணடைந்தேன்
என் செயல் நோக்கிப் பெருமிதம் கொள்ளும்,
    வகைதனைத் தள்ள - நின்னைச் சரணடைந்தேன்
தீமைகள் கொண்டானாம் பாவ நெஞ்சத்துள்,
    நன்மைகள் குடி கொண்டிட - நின்னைச் சரணடைந்தேன்
வேற்றுமைகள் விதைத்தனம் எம்மில்,
 அவை நீங்கி ஒற்றுமை வேரூன்ற - நின்னைச் சரணடைந்தேன்



1 comment:

  1. என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்...

    ReplyDelete

Poem for Jesus - 4

நின்னைச்   சரணடைந்தேன்!!! நின்னைச்   சரணடைந்தேன் – இயேசுவே                                    நின் பாதம் தேடி வந்தேன் காயங்கள்...