Thursday, November 7, 2019

Poem for Jesus - 1


பரனே!!!!!!!!

வானின் மழை நீர் கயிறாயிருந்தால்,

சேர்வேனே அதிலேறி பரனே உம்மை…..

பறவையின் சிறகது எனக்குமிருந்தால்,

பறந்தேனும் பார்த்திட வருவேனே உம்மை…..

வளியின் நிறையாம் சற்றதிகமிருந்தால்

கலந்தேனுமதிலே காண்பேனே பரனை……..

--அந்தோ ஆச்சரியம்!!


குறையோடு கறைகொண்டு வாழ்ந்திடும் தீயராம்

எமை மீட்டிட வந்தனம் பரனே!!!!....

குருட்டாட்டம் போட்டனம் எமை,

குருதி களைந்து சுத்திகரித்தனம் பரனே!!!....

உமைக் காண கண் கோடி வேண்டி நிற்கும் இப்பாவியைக்

கண் பாராயோ?? – எம் பரனே…….. 

                                                        - லெகின்ஸ் ஆபிரகாம்

Poem for Jesus - 4

நின்னைச்   சரணடைந்தேன்!!! நின்னைச்   சரணடைந்தேன் – இயேசுவே                                    நின் பாதம் தேடி வந்தேன் காயங்கள்...